நாம் முதலாக காணப்போவது மதுரையில் கோயில் கொண்டுள்ள சுந்தரானந்த சித்தரைத்தான்!
ஆவணி மாதத்தில் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்து, கிஷ்கிந்தையில் தன் இளம் பிராயத்தைக் கழித்து அங்கே ஞான சித்தியும் பெற்ற சுந்தரானந்தர், சித்துக்களின் விளை நிலமாக விளங்கியவர்.மதுரையம்பதியில் இவர் புரிந்த சித்துக்கள், அதன் எதிரொலிகள் நம்மை வியப்பிலாழ்த்துபவை.
சித்தர்கள் என்றாலே முதிர்ந்த, அழகிய உருவமற்றவர்கள் என்பதற்கு எதிராக, ‘மன்மதன் ஒருவேளை சித்தனாகிவிட்டானோ!’ என்று மதுரையம்பதி மக்களை எண்ண வைத்தவர்.
|